/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெவ்வேறு இடத்தில் விபத்து தென்சென்னையில் மூவர் பலி
/
வெவ்வேறு இடத்தில் விபத்து தென்சென்னையில் மூவர் பலி
வெவ்வேறு இடத்தில் விபத்து தென்சென்னையில் மூவர் பலி
வெவ்வேறு இடத்தில் விபத்து தென்சென்னையில் மூவர் பலி
ADDED : ஆக 03, 2024 12:33 AM

குன்றத்துார், தென் சென்னையில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில், மூவர் பலியாகினர்.
மாங்காடு காமாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன், 23; தனியார் ஊழியர்.
நேற்று முன்தினம் இரவு, குன்றத்துார் - குமணன்சாவடி சாலையில், 'பைக்'கில் சென்றார்.
மாங்காடு பகுதியில் வேகமாக வந்த தனியார் தொழிற்சாலை பேருந்து, இவரது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிவராமகிருஷ்ணன், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார்.
பள்ளிக்கரணை, கார்மேல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சதீஷ், 27; பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில், மென் பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, வேளச்சேரியில் உள்ள நண்பரை பார்த்து விட்டு, தன் 'யமஹா எப்.இசட்.,' பைக்கில் வீடு திரும்பினார்.
பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகர் சிக்னலை கடந்து சென்றபோது, எதிர் திசையில் வேகமாக வந்த, 'டாடா ஏஸ்' வேன், இவரது பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து, வேன் ஓட்டுனரான பெரும்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்த திருமலை, 42, என்பவரை கைது செய்தனர்.
ஈக்காடுதாங்கல், காந்திநகர் ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் பழனி. இவர், தன் உறவினரான விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சத்தியமங்கலத்தைச் சேர்ந்த முனியம்மாள், 59, என்பவரை, பட் ரோடு பகுதியில்விட, தன் 16 வயது மகனை அனுப்பினார்.
இவரது மகன், 'பஜாஜ் பல்சர்' ரக பைக்கில் முனியம்மாளை அழைத்துச் சென்றார்.
பட் ரோடு, மான்போர்டு பள்ளி அருகே, பின்னால் அமர்ந்திருந்த முனியம்மாள் தவறி விழுந்தார். பலத்த காயமடைந்த அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.