sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.26,000 பணம் பறிப்பு போலீசார் மூவர் 'சஸ்பெண்ட்'

/

ரூ.26,000 பணம் பறிப்பு போலீசார் மூவர் 'சஸ்பெண்ட்'

ரூ.26,000 பணம் பறிப்பு போலீசார் மூவர் 'சஸ்பெண்ட்'

ரூ.26,000 பணம் பறிப்பு போலீசார் மூவர் 'சஸ்பெண்ட்'


ADDED : ஏப் 24, 2024 12:28 AM

Google News

ADDED : ஏப் 24, 2024 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

படப்பை, கடந்த 21ம் தேதி, மகாவீர் ஜெயந்தி அன்று, 'டாஸ்மாக்' கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தாம்பரம் அருகே மணிமங்கலம் அடுத்த கரசங்கால் பகுதியை சேர்ந்த பெருமாள், 24, என்பவர் கள்ள சந்தையில் மது விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.

தகவல் அறிந்த மணிமங்கலம் காவல் நிலைய தலைமை காவலர் சங்கர், 50, போலீஸ்காரர் ஆனந்தராஜ், 34, கணேஷ் சிங், 35, ஆகியோர், கரசங்கால் சென்று பெருமாளிடம் இருந்த 28 குவார்ட்டர் மது பாட்டில்கள் 26,000 ரூபாயை பறித்துள்ளனர்.

இது தொடர்பாக பெருமாள் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த போலீசார், அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த பெருமாள் படப்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம், தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் கவனத்திற்கு சென்றது. விசாரணையில் போலீசார் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சங்கர், ஆனந்தராஜ், கணேஷ் ஆகியோரை, நேற்று பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us