sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆந்திரா கனமழையால் பாதை சேதம் சீரமைப்பு பணியால் ரயில்கள் ரத்து

/

ஆந்திரா கனமழையால் பாதை சேதம் சீரமைப்பு பணியால் ரயில்கள் ரத்து

ஆந்திரா கனமழையால் பாதை சேதம் சீரமைப்பு பணியால் ரயில்கள் ரத்து

ஆந்திரா கனமழையால் பாதை சேதம் சீரமைப்பு பணியால் ரயில்கள் ரத்து


ADDED : செப் 04, 2024 02:25 AM

Google News

ADDED : செப் 04, 2024 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஆந்திரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. விஜயவாடா - கூடூர் தடம், காஜிபேட் உள்ளிட்ட ரயில் பாதைகள், பாலங்கள் மற்றும் சில ரயில் நிலையங்கள் சேதமடைந்துள்ளன.

இவற்றை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதனால், சென்ட்ரல் - புதுடில்லி உட்பட 20க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவை நேற்றும் ரத்து செய்யப்பட்டன. இதுதவிர, சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, தாம்பரம் - மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சி காலை 7:15 மணி, புதுச்சேரி - மேற்கு வங்கம் ஹவுரா மதியம் 2:15 மணி ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

புதுடில்லி - சென்ட்ரல் இரவு 9:05 மணி தமிழ்நாடு விரைவு ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுஉள்ளது.

கன்னியாகுமரி - ஹவுரா காலை 5:50 மணி, திருநெல்வேலி - மேற்கு வங்கம் புருலியா அதிகாலை 3:00 மணி ரயில்கள் வரும் 7ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'ரயில் பாதைகள், பாலங்கள் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஓரிரு நாளில் ரயில் சேவை சீராகும் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.

23 ரயில் சேவைகள் மாற்றம் @


@ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் 23 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.கடற்கரை - எழும்பூர் ரயில் நிலையம் இடையே 3, 5, 7ம் தேதிகளில் இரவு 10:30 மணி முதல் அதிகாலை 4:30 மணி வரை ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன.
இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே இரவு மற்றும் அதிகாலை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எழும்பூரில் இருந்து இரவு 10:40 கடற்கரை - திருவள்ளூர் - அரக்கோணம் - கும்மிடப்பூண்டி ரயில்கள், 5, 7ம் தேதிகளில் இரவு மற்றும் அதிகாலையில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த மார்க்கத்திலான சில ரயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்படும். திருமால்பூர் - கடற்கரை இரவு 9:00 மணி ரயில் 5, 7ம் தேதிகளில் எழும்பூர் வரை இயக்கப்படும்.








      Dinamalar
      Follow us