sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கூவத்தில் கலக்கும் கழிவுநீர் அறிக்கை கேட்கிறது தீர்ப்பாயம்

/

கூவத்தில் கலக்கும் கழிவுநீர் அறிக்கை கேட்கிறது தீர்ப்பாயம்

கூவத்தில் கலக்கும் கழிவுநீர் அறிக்கை கேட்கிறது தீர்ப்பாயம்

கூவத்தில் கலக்கும் கழிவுநீர் அறிக்கை கேட்கிறது தீர்ப்பாயம்


ADDED : ஆக 08, 2024 12:36 AM

Google News

ADDED : ஆக 08, 2024 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,டேங்கர் லாரிகளில் கொண்டுவரப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், சென்னை முகப்பேர் பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் விடப்படுகிறது. பகல் நேரத்திலேயே இது நடக்கிறது.

இதனால் கூவம் ஆறு கடுமையாக மாசடைந்து பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

இதனால், சென்னை நதி மறு சீரமைப்பு அறக்கட்டளை, பல நுாறு கோடி ரூபாய் செலவில் கூவம் ஆற்றை துாய்மைப்படுத்த எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுவதில்லை என, நாளிதழ்களில் செய்தி வெளியானது.

இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், 'டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுநீர், முகப்பேர் பாலத்திலிருந்து பகல் நேரத்திலேயே கூவம் ஆற்றில் விடப்படுவது குறித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர்.

சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர், சென்னை கலெக்டர் ஆகியோர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அரசு ஆவணங்களின் அடிப்படையில், இந்த அறிக்கை இருக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை ஆக., 30ல் நடக்கும்' என உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us