/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாரி உரிமையாளர் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்
/
லாரி உரிமையாளர் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 09, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மணல் குவாரிகளை திறக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அமைந்தகரை லாரி உரிமையாளர் நலச்சங்கம் சார்பில், எழும்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதன் தலைவர் யுவராஜ் பேசியதாவது:
தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனைக்கு பின், ஒன்பது மாதங்களுக்கும் மேலாக மணல் குவாரிகள் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் நபர் தலையீடு இல்லாமல், மணல் குவாரிகளை அரசே நேரடியாக நடத்த நீதிமன்றம் உத்தரவு வழங்கி உள்ளது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும். நிறுத்தப்பட்டுள்ள மணல் குவாரிகளையும் தமிழக அரசு உடனடியாக திறக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.