/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மொபைல் கடையில் புகுந்து 20 போன் திருடிய இருவர் கைது
/
மொபைல் கடையில் புகுந்து 20 போன் திருடிய இருவர் கைது
மொபைல் கடையில் புகுந்து 20 போன் திருடிய இருவர் கைது
மொபைல் கடையில் புகுந்து 20 போன் திருடிய இருவர் கைது
ADDED : மார் 15, 2025 12:45 AM

முகப்பேர், முகப்பேர் கிழக்கு, பாரி சாலையைச் சேர்ந்தவர் மொய்தீன், 45. இவர், 'பிளாக் அண்ட் ஒயிட்' என்ற பெயரில், மொபைல் போன் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் காலை, கடையை திறக்க சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டு, விலை உயர்ந்த 20 மொபைல் போன்கள், 45,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து, திருமங்கலம் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். இதில், திருட்டில் ஈடுபட்ட ராயப்பேட்டை, துவாரகா நகரைச் சேர்ந்த ராஜேஷ், 26, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த் அபிஷேக், 21, ஆகியோரை கைது செய்து, ஏழு மொபைல் போன்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் நள்ளிரவு புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள, மற்றொருவரை தேடி வருகின்றனர்.