sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மைசூரு பெண் பலாத்காரம் கோயம்பேடில் இருவர் கைது

/

மைசூரு பெண் பலாத்காரம் கோயம்பேடில் இருவர் கைது

மைசூரு பெண் பலாத்காரம் கோயம்பேடில் இருவர் கைது

மைசூரு பெண் பலாத்காரம் கோயம்பேடில் இருவர் கைது


ADDED : ஜூலை 20, 2024 01:14 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயம்பேடு:மைசூரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், நேற்று முன்தினம் இரவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கோயம்பேடில் பேருந்துக்காக காத்திருந்த தன்னை மர்ம நபர்கள் ஆட்டோவில் கடத்தி, மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து, அறையில் அடைத்து வைத்துள்ளதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் மொபைல் போன் டவரை ஆய்வு செய்த போது, மடிப்பாக்கத்தில் இருந்து அழைப்பு வந்தது தெரியவந்தது.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பெண்ணை மீட்டு, அவரை கடத்தி வந்த வேலுாரைச் சேர்ந்த சதீஷ், 33, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சகிலா, 35, ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சகிலா, பாலியல் தொழில் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us