/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் இருவரிடம் 'பிக் பாக்கெட்'
/
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் இருவரிடம் 'பிக் பாக்கெட்'
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் இருவரிடம் 'பிக் பாக்கெட்'
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் இருவரிடம் 'பிக் பாக்கெட்'
ADDED : மார் 09, 2025 01:07 AM
சென்னை, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதன் தலைவர் விஜய் பங்கேற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
நிகழ்ச்சியில் அழைப்பு கிடைத்தவர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் ஏராளமானோர் திரண்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதை பயன்படுத்தி ம.நே.ஜ.க.,வைச் சேர்ந்த மண்ணடியைச் சேர்ந்த அப்துல் அபுதாகிர், 35, என்பவரிடம், 61,500 ரூபாயும், பெரம்பூரைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவரிடம், 40,000 ரூபாயும் 'பிக் பாக்கெட்' அடிக்கப்பட்டுள்ளது. இருவரும் அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரே நபர் இருவரிடமும் கைவரிசை காட்டியது தெரிந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.