/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் அண்ணாநகர் கிழக்கில் நெரிசல்
/
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் அண்ணாநகர் கிழக்கில் நெரிசல்
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் அண்ணாநகர் கிழக்கில் நெரிசல்
சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் அண்ணாநகர் கிழக்கில் நெரிசல்
ADDED : ஆக 28, 2024 12:55 AM

அண்ணா நகர்,
அண்ணா நகர் கிழக்கு பகுதியில், சாலையில் அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களால், அப்பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர்.
அண்ணா நகர் மண்டலம்,சிந்தாமணி அருகில், 12வது பிரதான சாலையில், காந்தி தெரு உள்ளது.
இப்பகுதிகளில் எராளமான குடியிருப்புகள் உள்ளன. இத்தெருவில் அத்துமீறி சிலர், இருபக்கமும் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர்.
இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், குடியிருப்புவாசிகள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, அப்பகுதிக்கு தொடர்பில்லாத வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

