sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கணவர் கண்முன் மனைவி மினி லாரி விபத்தில் பலி

/

கணவர் கண்முன் மனைவி மினி லாரி விபத்தில் பலி

கணவர் கண்முன் மனைவி மினி லாரி விபத்தில் பலி

கணவர் கண்முன் மனைவி மினி லாரி விபத்தில் பலி


ADDED : செப் 14, 2024 12:27 AM

Google News

ADDED : செப் 14, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடபழனி,

வேளச்சேரி, நேரு நகரைச் சேர்ந்தவர் பெருமாள், 65. இவரது மனைவி பூமி, 55. இவர்கள், 'ஹீரோ ஸ்ப்ளெண்டர்' பைக்கில், நேற்று மாலை வடபழனி 100 அடி சாலை வழியாக வேளச்சேரிக்கு சென்றனர்.

அப்போது, பின்னால் வந்த 'அசோக் லேலண்ட்' மினி லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில், பூமியின் தலை மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெருமாளுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார், பூமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து ஏற்படுத்திய ஆலப்பாக்கம், லட்சுமி நகரைச் சேர்ந்த ரஞ்சித், 24, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us