/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
48 வழக்குகளில் தொடர்புடைய பெண் கைது
/
48 வழக்குகளில் தொடர்புடைய பெண் கைது
ADDED : பிப் 15, 2025 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, கன்னிகாபுரம், புதிய திரு.வி.க.நகரைச் சேர்ந்தவர் இளம்பரிதி என்ற டைகர் ராஜாத்தி, 43; 'ஏ' பிரிவு ரவுடி.
இவர் மீது புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ், பெரவள்ளூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில், 48 வழக்குகள் நிலுவையில் உள்ளன. புளியந்தோப்பு போலீசார், வழக்கு விசாரணைக்காக இவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், டிக்காஸ்டர் சாலையில், டைகர் ராஜாத்தியை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று மாலை அவரை சிறையில் அடைத்தனர்.