ADDED : ஏப் 24, 2025 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்குன்றம், செங்குன்றம் மதுவிலக்குப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று முன்தினம் செங்குன்றம் அருகே, மொண்டியம்மன் நகர் வாகன சோதனைச் சாவடியில், லாரியில் இருந்து இறங்கி வந்த நபரை பிடித்து, சோதனை மேற்கொண்டனர்.
அவர் வைத்திருந்த சாக்குப்பையில், 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. பிடிபட்டவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காளீஸ்வரன், 25, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

