ADDED : ஜன 18, 2025 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமுல்லைவாயல், திருமுல்லைவாயல், தென்றல் நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாரதி, 45. இவர், அம்பத்துாரில் 'சார்மினார்' பந்தக்கால் கடை வைத்துள்ளார்.
கடந்த 12ம் தேதி திருச்செந்துாருக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார்.
இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அறிந்து, அப்பகுதியைச் சேர்ந்த ஜெயபாரதியின் உறவினர் காமராஜ், அங்கு சென்று பார்த்தபோது, பீரோ கதவை உடைத்து, 10 சவரன் நகை திருடப்பட்டிருந்தது தெரிந்தது.
இது குறித்து, திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.