sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிறுமியை சீரழித்த 13 பேர் கைது

/

சிறுமியை சீரழித்த 13 பேர் கைது

சிறுமியை சீரழித்த 13 பேர் கைது

சிறுமியை சீரழித்த 13 பேர் கைது


ADDED : மே 11, 2025 12:42 AM

Google News

ADDED : மே 11, 2025 12:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லாவரம், பல்லாவரம் அருகே, பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமியிடம், அதே பகுதியை சேர்ந்த சிறுவன், காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளான். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான்.

அதோடு, தன் நண்பர்கள் சிலரையும் சிறுமியிடம் அறிமுகம் செய்து வைத்து, மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட வைத்துள்ளான்.

இதனால், மனதளவில் பாதிக்கப்பட்ட சிறுமி, தனிமையில் சோகமாக இருந்துள்ளார். இதை கவனித்த பெற்றோர், சிறுமியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக, மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆறு சிறுவர்கள் மற்றும் கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த நந்தகுமார், 19, சஞ்சய், 19, முடிச்சூரைச் சேர்ந்த சூர்யா, 22, மற்றும் சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை தடுக்க தவறிய சிறுமியின் தாய் என, 13 பேரை, நேற்று முன்தினம், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us