sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வார இறுதி வெளியூர் பயணம் விரைவு பஸ்சில் 14,440 சீட் காலி

/

வார இறுதி வெளியூர் பயணம் விரைவு பஸ்சில் 14,440 சீட் காலி

வார இறுதி வெளியூர் பயணம் விரைவு பஸ்சில் 14,440 சீட் காலி

வார இறுதி வெளியூர் பயணம் விரைவு பஸ்சில் 14,440 சீட் காலி


ADDED : பிப் 15, 2024 12:55 AM

Google News

ADDED : பிப் 15, 2024 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, கிளாம்பாக்கத்தில் இருந்து, நாளை பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் விரைவு பேருந்துகளில், 14,440 முன்பதிவு இருக்கைகள் காலியாக உள்ளன.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை, கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்குச் செல்ல வசதியாக, இணையவழி முன்பதிவு வசதியுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அந்த வகையில் கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை, விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும், 283 பேருந்துகளில், இணைய வழியில் 11,848 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 9,794 இருக்கைகள் காலியாக உள்ளன.

இவற்றுடன் விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முறையே 1,762, 1,399, 1,443, 42 என மொத்தம், 14,440 முன்பதிவு இருக்கைகள் காலியாக உள்ளன.

இதேபோல், வரும் 17-ம் தேதி 14,895 முன்பதிவு இருக்கைகளும், 18-ம் தேதி 15,340 முன்பதிவு இருக்கைகளும் காலியாக உள்ளன.

அதேநேரம், தமிழகம் முழுதும் நாளை இயக்கப்படும் பேருந்துகளில் உள்ள 89,507 இருக்கைகளில், 84,060 இருக்கைகள் காலியாகவும், வரும் 17-ம் தேதி 85,265 இருக்கைகளும், 18-ம் தேதி 86,411 இருக்கைகளும் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பயணியர் கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, முன்னரே www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி வாயிலாக முன்பதிவு செய்து, சிரமமின்றி அரசு பேருந்துகளில் பயணிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us