sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கோட்டையில் வேட்டை 15 பூனைகள் சிக்கின

/

கோட்டையில் வேட்டை 15 பூனைகள் சிக்கின

கோட்டையில் வேட்டை 15 பூனைகள் சிக்கின

கோட்டையில் வேட்டை 15 பூனைகள் சிக்கின


ADDED : டிச 25, 2024 11:53 PM

Google News

ADDED : டிச 25, 2024 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள பாரம்பரிய கட்டடத்தில், சட்டசபை அரங்கம், முதல்வர், அமைச்சர்கள், தலைமை செயலர் உள்ளிட்ட பலரது அலுவலகங்கள் உள்ளன. இதையொட்டிய, நாமக்கல் கவிஞர் மாளிகை, 10 மாடி கட்டடத்தில், பல்வேறு துறைகளின் செயலர் அலுவலகங்கள் உள்ளன.

அரசின் பழைய ஆவணங்கள், பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் என, பல இடங்களில் காகித வடிவில் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றை, பெருச்சாளி, மூஞ்சூறு உள்ளிட்டவை சேதப்படுத்தி வருகின்றன.

இதைத் தடுக்க, அரசு அலுவலர்கள் சிலர், 50க்கும் மேற்பட்ட பூனைகளை கொண்டு வந்து விட்டிருந்தனர். இந்த பூனைகளுக்கு, தாங்கள் சாப்பிடும் உணவையே, பாசத்துடன் வழங்கி வந்தனர். பூனைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக, கட்டடத்தை பராமரிக்கும் பொதுப்பணித் துறையினர், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, நரிக்குறவர்களுடன் வந்த மாநகராட்சி ஊழியர்கள், 15க்கும் மேற்பட்ட பூனைகளை வேட்டையாடி, சாக்குப்பையில் எடுத்துச் சென்றனர்.






      Dinamalar
      Follow us