/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேம்பாடும் 15 ரயில் நிலைங்கள் இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாடு
/
மேம்பாடும் 15 ரயில் நிலைங்கள் இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாடு
மேம்பாடும் 15 ரயில் நிலைங்கள் இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாடு
மேம்பாடும் 15 ரயில் நிலைங்கள் இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாடு
ADDED : ஜூலை 23, 2025 12:51 AM
சென்னை, 'அம்ரித் பாரத் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இரண்டாம் கட்டமாக, 15 ரயில் நிலையங்களும் இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும்' என, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில்வேயில், 'அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம்' என்ற புதிய திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக, 508 ரயில் நிலையங்களை, 24,470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள், ஓராண்டாக நடந்து வருகின்றன.
அதன்படி, தெற்கு ரயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.
முதல் கட்டமாக மேம்படுத்தப்பட்ட. 103 ரயில் நிலையங்கள் ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
இதுகுறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், சென்னை ரயில் கோட்டத்தில், 17 நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இதில், பணிகள் நிறைவு செய்த பரங்கிமலை, சூலுார்பேட்டை ரயில் நிலையங்களில் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
சென்னை கடற்கரை, பூங்கா, மாம்பலம், கிண்டி, குரோம்பேட்டை, திரிசூலம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, பெரம்பூர், அம்பத்துார், திருவள்ளூர், அரக்கோணம்,ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, திருத்தணி ஆகிய 15 ரயில் நிலையங்களிலும் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இந்த ரயில் நிலையங்களில், லிப்ட், நடைமேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணியர் காத்திருப்பு அறைகள், நுழைவாயில்கள் சீரமைப்பு, எஸ்கலேட்டர்கள், மல்டி லெவல் பார்க்கிங், 'சிசிடிவி' கேமிரா உள்ளிட்ட வசதிகள் இடம் பெறும்.
அனைத்து பணிகளும் முடிந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
***