/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வண்டலுார் பூங்காவை ரசித்த 15,000 பேர்
/
வண்டலுார் பூங்காவை ரசித்த 15,000 பேர்
ADDED : அக் 03, 2024 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்,
விடுமுறை தினமான நேற்று, வண்டலுார் உயிரியல் பூங்காவை, 15,000 பேர் கண்டு ரசித்தனர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, விடுமுறை தினமான நேற்று, வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு அதிக பார்வையாளர்கள் வருவர் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போல், காலை முதல் பார்வையாளர்கள் குடும்பம் குடும்பமாக வரத் துவங்கினர்.
காலை, 11:00 மணிக்கு மேல் கூட்டம் அதிகரித்தது. அந்த வகையில் நேற்று மட்டும், 15,000 பேர் வருகை புரிந்து யானை, சிங்கம், வெள்ளைப் புலி, பறவை, காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளை கண்டு ரசித்தனர்.