sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

10 வயது சிறுமி பலாத்காரம் காம கொடூரனுக்கு '20 ஆண்டு'

/

10 வயது சிறுமி பலாத்காரம் காம கொடூரனுக்கு '20 ஆண்டு'

10 வயது சிறுமி பலாத்காரம் காம கொடூரனுக்கு '20 ஆண்டு'

10 வயது சிறுமி பலாத்காரம் காம கொடூரனுக்கு '20 ஆண்டு'


ADDED : ஜூலை 19, 2025 12:26 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, செங்கல்பட்டில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காம கொடூரனுக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு 'போக்சோ' நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

சென்னை, புனித தோமையார்மலை மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 10 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இதே பகுதியைச் சேர்ந்த கீர்த்தி ஜான்பால், 47, என்பவர், சிறுமியின் தந்தைக்கு நண்பர் என்பதால், அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

கடந்த 2021 ஏப்., 17ம் தேதி, சிறுமி வீட்டின்அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கீர்த்தி ஜான்பால், வீட்டின் சுற்றுச்சுவர் அருகே உள்ள சந்துக்குள்சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார்.

சிறுமி சத்தம் போட்ட போது, அவரது தாய் ஓடி வந்ததும், கீர்த்தி ஜான்பால் தப்பிச் சென்றார்.

இது குறித்து, சிறுமியின்பெற்றோர் அளித்த புகாரின்படி, புனித தோமையார்மலை மகளிர் காவல் நிலைய போலீசார், 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து, கீர்த்தி ஜான்பாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு விசாரணை,செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில், வழக்கறிஞர் லட்சுமி ஆஜரானார்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், கீர்த்தி ஜான்பாலுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு 4 லட்சம்ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, புழல் சிறையில் கீர்த்தி ஜான்பால் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us