sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

23 கிலோ கஞ்சா கடத்திய 4 வாலிபர்களுக்கு 'காப்பு'

/

23 கிலோ கஞ்சா கடத்திய 4 வாலிபர்களுக்கு 'காப்பு'

23 கிலோ கஞ்சா கடத்திய 4 வாலிபர்களுக்கு 'காப்பு'

23 கிலோ கஞ்சா கடத்திய 4 வாலிபர்களுக்கு 'காப்பு'


ADDED : பிப் 09, 2025 12:44 AM

Google News

ADDED : பிப் 09, 2025 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர், பெரம்பூர் ரயில் நிலையத்தில், கஞ்சா கடத்தப்படுவதாக, அண்ணா நகர் மதுவிலக்கு போலீசாருக்கு, நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.

போலீசார், பெரம்பூர், முரசொலி மாறன் மேம்பாலம் அருகில் கண்காணித்தபோது, ரயில் நிலையத்தில் இருந்து, பெரிய பையுடன் வெளியில் வந்த இருவரை மடக்கி பிடித்தனர்.

அதை சோதித்ததில், 10 பார்சலில், 13 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில், நாமக்கல், குமாரபாளையத்தை சேர்ந்த விஜயகுமார், 28, அவரது நண்பரான ஈரோட்டை சேர்ந்த வசந்தகுமார், 27, ஆகிய இருவரும், ஓடிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி, சென்னை வழியாக நாமக்கல்லுக்கு கடத்த முயன்றது தெரிந்தது.

அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில், முதல் முறையாக கஞ்சா கடத்தியது தெரிந்தது. அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், நேற்று காலை அவர்களை சிறையில் அடைத்தனர்.

பெசன்ட் நகர்


பெசன்ட் நகர் கடற்கரையில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின்படி, அடையாறு போலீசார் விசாரித்தனர்.

அதில், திருவெற்றியூரை சேர்ந்த முஸ்தபா, 34, கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கிஷோர், 24, ஆகியோர், 10 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.

கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us