/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எஸ்.ஐ.,க்கள் 240 பேருக்கு பதவி உயர்வு
/
எஸ்.ஐ.,க்கள் 240 பேருக்கு பதவி உயர்வு
ADDED : நவ 24, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: காவல் துறையில் பணியாற்றும் எஸ்.ஐ.,க்கள் 240 பேருக்கு, இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுதும் பல்வேறு காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் போலீஸ் எஸ்.ஐ.,க்கள் 240 பேர், பதவி உயர்வுக்கான தகுதி பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.
இவர்களுக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளித்து, தமிழக பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமன் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதில், சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும், 39 எஸ்.ஐ.,க்கள் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

