ADDED : ஜூன் 11, 2024 05:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பேரி: சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின் படி, கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி, கடந்த ஏழு நாட்களில், வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 26 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து, 50 கிலோ கஞ்சா, 17.29 லட்சம் ரூபாய், ஒன்பது மொபைல்போன்கள், ஐந்து இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நடப்பாண்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த, 156 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.