/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செயின், போன் பறிப்பு 26 பேருக்கு 'காப்பு'
/
செயின், போன் பறிப்பு 26 பேருக்கு 'காப்பு'
ADDED : ஜன 01, 2024 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னையில், செயின், மொபைல்போன் பறிப்பு மற்றும் இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடர்பாக, ரகசிய கண்காணித்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவிட்டார்.
அதன்படி, தனிப்படை போலீசார் ,சென்னையின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, செயின், மொபைல்போன் பறிப்பு மற்றும் இருசக்கர வாகனங்கள் திருட்டு தொடர்பாக, நேற்றுடன், 19 வழக்குகளில் சிக்கிய, 26 பேரை கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து, எட்டு மொபைல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.