ADDED : ஜூன் 12, 2026 03:03 AM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னை மாநகர காவல் நிலையங்களில் பணிபுரியும் 29 இன்ஸ்பெக்டர்கள், வேறு மண்டலங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகர காவல் நிலையங்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்களில், 14 பேர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வடக்கு மண்டலத்திற்கும்; ஆறு பேர் திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மத்திய மண்டலத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மண்டலத்திற்கு இருவர்; சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு இருவர்; பொருளாதார குற்றப்பிரிவுக்கு ஒருவர்; ரயில்வே துறைக்கு மூன்று பேர்; மதுரை, தேனி உள்ளிட்ட தெற்கு மண்டலத்திற்கு ஒருவர் என, மொத்தம் 29 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை கமிஷனர் அமல்ராஜ் பிறப்பித்துள்ளார்.
