தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ திருடனிடம் 21 சவரன் பறிமுதல்

 திருடனிடம் 21 சவரன் பறிமுதல்

 திருடனிடம் 21 சவரன் பறிமுதல்


ADDED : ஜூன் 12, 2026 03:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 03:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐஸ்ஹவுஸ்: திருவல்லிக்கேணி, சுதந்திரா நகரைச் சேர்ந்தவர் பிரமிளா, 42; தனியார் வங்கி துாய்மை பணியாளர். கடந்த 25-ம் தேதி, அவசரமாக உறவினர் வீட்டுக்குச் செல்லும்போது, வீட்டின் கதவை பூட்டாமல், தாழ்ப்பாள் மட்டும் போட்டு சென்றார்.

வீடு திரும்பியபோது, பீரோவில் இருந்த 11 சவரன் நகைகள், 15,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது.

அதே தெருவில் வசிக்கும் விஷ்ணுகுமார், 42, என்பவர், இதேபோன்று வீட்டை பூட்டாமல் வெளியே சென்று திரும்பியபோது, கதவு உள் புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. கதவைத் தட்டியதும், உள்ளே இருந்த நபர் கதவை திறந்து தப்பியோடினார். பின், பீரோவை பரிசோதித்ததில், 12 சவரன் நகைகள் மற்றும் 30,000 ரூபாய் திருடப்பட்டிருந்தது.

இரு சம்பவங்கள் குறித்து விசாரித்த ஐஸ் ஹவுஸ் போலீசார், திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார், 25, என்பவரை கைது செய்து, 21 சவரன் நகைகள் மற்றும் 30,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us