sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காயங்களுடன் மிதந்த 3 உடல் உத்திரமேரூரில் கொடூரம்

/

காயங்களுடன் மிதந்த 3 உடல் உத்திரமேரூரில் கொடூரம்

காயங்களுடன் மிதந்த 3 உடல் உத்திரமேரூரில் கொடூரம்

காயங்களுடன் மிதந்த 3 உடல் உத்திரமேரூரில் கொடூரம்


ADDED : ஜன 16, 2025 12:54 AM

Google News

ADDED : ஜன 16, 2025 12:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது விழுதவாடி கிராமம். இக்கிராமத்தில், மேய்ச்சல் நிலங்களையொட்டி, தாங்கல் பகுதி உள்ளது.

நேற்று, மாட்டு பொங்கலையொட்டி, அப்பகுதியைச் சேர்ந்த கால்நடை பராமரிப்போர் சிலர், தங்களது கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தப்படுத்த, தாங்கல் நீர்ப்பிடிப்பு பகுதிக்கு சென்றனர்.

அப்போது, தாங்கல் நீரில் மூன்று ஆண் சடலங்கள் மிதப்பதை கண்ட அவர்கள், உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் எஸ்.பி., உத்திரமேரூர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார், உத்திரமேரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் உடல்களை மீட்டனர்.

மீட்கப்பட்ட உடல்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. இது குறித்து, போலீசார் விசாரித்தனர். அதில், அவர்கள் வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் விஸ்வா, 18, சிவசங்கர் மகன் பரத், 17, ஏழுமலை மகன் சத்ரியன், 17, என்பது தெரிந்தது.

அவர்கள் மூவரும், கடந்த 12ம் தேதி, தங்களது வீடுகளில் இருந்து மாயமானதாகவும், வெட்டு காயங்கள் உள்ளதால் கொலை செய்து தாங்கலில் வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில், போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us