sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயிலில் தனியாக பயணித்த 3 சிறுவர் - சிறுமியர் மீட்பு

/

ரயிலில் தனியாக பயணித்த 3 சிறுவர் - சிறுமியர் மீட்பு

ரயிலில் தனியாக பயணித்த 3 சிறுவர் - சிறுமியர் மீட்பு

ரயிலில் தனியாக பயணித்த 3 சிறுவர் - சிறுமியர் மீட்பு


ADDED : ஆக 19, 2025 12:41 AM

Google News

ADDED : ஆக 19, 2025 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிமலை, மின்சார ரயிலில் ஆதரவின்றி பயணித்த இரண்டு சிறுமியர் உள்ளிட்ட மூன்று பேரை ரயில்வே போலீசார் மீட்டனர்.

தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில், நேற்று காலை பழவந்தாங்கல் நிலையத்தை வந்தடைந்தபோது, ஒரு பெட்டியில் 4, 2 வயது கொண்ட சிறுமியர், 3 வயது சிறுவன் ஆகியோர், ஆதரவின்றி தனியாக பயணித்தனர்.

இதைக் கண்ட ரயில்வே போலீசார், குழந்தைகளை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இறக்கினர்.

விசாரணையில், அவர்கள் தங்களின் பெயரை தவிர, வேறு எதையும் கூறவில்லை. இதையடுத்து, குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளிடம், மூவரையும் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

சில நாட்களுக்கு முன், சானடோரியம் ரயில் நிலையத்தில் மூன்று வயது சிறுவனை, மர்மநபர் இறக்கிவிட்டு சென்ற நிலையில், மேலும், 3 சிறுவர் - சிறுமியர் மீட்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து, ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us