sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாநகராட்சியிடம் நீர்வள துறையின் 3 கால்வாய்

/

மாநகராட்சியிடம் நீர்வள துறையின் 3 கால்வாய்

மாநகராட்சியிடம் நீர்வள துறையின் 3 கால்வாய்

மாநகராட்சியிடம் நீர்வள துறையின் 3 கால்வாய்


ADDED : அக் 19, 2024 12:26 AM

Google News

ADDED : அக் 19, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை மாநகராட்சி எல்லைக்குள் நீர்வளத்துறையின் கீழ், 31 கால்வாய்கள் உள்ளன. பருவமழை காலத்தின்போது முறையாக துார்வாரி சீரமைக்காததால், வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

இதற்காக, கால்வாய் நீரை வெளியேற்றவும், சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தவிர்க்கவும், கால்வாய் துார்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என, நீர்வளத்துறையிடம், மாநகராட்சி கோரிக்கை வைத்து காத்திருந்தது.

ஆனால், கால்வாய் பராமரிப்பில் தாமதம் நிலவியதால், விருகம்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய், வீராங்கல் கால்வாய்களை, தங்களிடம் ஒப்படைக்குமாறு, சென்னை மாநகராட்சி கோரிக்கை வைத்தது.

இதையேற்று, மூன்று கால்வாய்களையும் மாநகராட்சியிடம் ஒப்படைத்து, அதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை முடிந்தபின், நிதி ஒதுக்கி துார்வாரும் பணி துவங்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us