/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கஞ்சா கடத்திய பெண் உட்பட 3 பேர் கைது
/
கஞ்சா கடத்திய பெண் உட்பட 3 பேர் கைது
ADDED : மார் 18, 2024 01:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பேரி:தரமணி போலீசார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, காரில் கஞ்சா கடத்திய மடிப்பாக்கத்தைச் சேர்ந்த வனிதா, 36, மற்றும் ஆட்டோவில் கஞ்சா கடத்திய கண்ணகிநகரைச் சேர்ந்த சீனிவாசன், 37, ஆகிய இருவரை கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 10.2 கிலோ கஞ்சா, கார், ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், புனித தோமையார்மலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், கஞ்சா வைத்திருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ்குமார், 37, என்பவரை கைது செய்து, 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

