ADDED : ஜன 05, 2025 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சைதாப்பேட்டை,சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகில், என்.ஆர். கேலக்ஸி என்ற லாட்ஜ் உள்ளது. இங்கு, கடலுாரைச் சேர்ந்த சுப்பிரமணியம், 30, என்பவர், 10 நாட்களுக்கு முன், சில அறைகளை முன்பதிவு செய்தார்.
மறுநாள், பெங்களூரு, மும்பையில் இருந்து, 25, 26, 34 ஆகிய வயதுள்ள மூன்று பெண்களை அழைத்து வந்து, பாலியல் தொழில் நடத்தினார்.
இதுகுறித்து தகவலறிந்த சைதாப்பேட்டை போலீசார், நேற்று சுப்பிரமணியத்தை கைது செய்து, மூன்று பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

