sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஏரியில் கழிவு கொட்டிய 3 லாரிகள் பறிமுதல்

/

ஏரியில் கழிவு கொட்டிய 3 லாரிகள் பறிமுதல்

ஏரியில் கழிவு கொட்டிய 3 லாரிகள் பறிமுதல்

ஏரியில் கழிவு கொட்டிய 3 லாரிகள் பறிமுதல்


ADDED : பிப் 02, 2025 12:46 AM

Google News

ADDED : பிப் 02, 2025 12:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணலி,மணலி மண்டலம், 16வது வார்டு, சடையங்குப்பம் ஏரி அருகே, அனுமதியின்றி லாரிகளில் கழிவுகளை எடுத்து வந்து கொட்டி எரிப்பதால், கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக புகார் எழுந்தது.

புகாரை தொடர்ந்து, மண்டல செயற்பொறியாளர் தேவேந்திரன் தலைமையில், உதவி செயற்பொறியாளர் தென்னவன், உதவி பொறியாளர் விஜய் உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று காலை, அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, சடையங்குப்பம் ஏரி அருகே, மூன்று லாரிகளில் கழிவுகள் கொண்டு வந்து கொட்டுவது தெரியவந்தது. பின், அந்த லாரிகளை மடக்கி பிடித்து, ஓட்டுநர்களிடம் விசாரித்தனர்.

அப்போது, ஐ.சி.எப்., நிறுவனத்தின் கழிவுகள் என, தெரியவந்தது. அதை, தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர், இங்கு வந்து கொட்டிச் செல்வது தெரியவந்தது. ஏற்கனவே, 27ம் தேதியும், லாரிகளில் கொண்டு வந்து, கழிவுகளை கொட்டி சென்றுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, 4,200 கிலோ கழிவுகளை ஏற்றி வந்த மூன்று லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார், அவற்றுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள், சாத்தாங்காடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us