ADDED : பிப் 22, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பேரி சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின்படி, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வோரை, போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி, கடந்த ஏழு நாட்களாக வெவ்வேறு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 37 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 34 கிலோ கஞ்சா, 2,354 வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
நடப்பாண்டில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 28 பேர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.