ADDED : மார் 21, 2026 03:44 AM
சென்னை: தமிழகம் முழுதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மாதவரம் அருகே நேற்று மதியம் தேர் தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சரக்கு வேனில் எடுத்து வரப்பட்ட 44 கிலோ தங்க கட்டிகள் சிக்கின. தங்கம் வைத்திருந்த பெட்டியுடன் அந்த வேனை, அதிகாரிகள் மாதவரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில்
ஒப்படைத்தனர்.
விசாரணையில், செங்குன்றம், பாடியநல்லுார் சோதனை சாவடி அருகே இயங்கும் நகைக் கடையில் இருந்து, பொன்னேரியில் உள்ள நகை பட்டறைக்கு, தங்கக்கட்டி கொண்டு சென்றது தெரிய வந்தது.
இது குறித்து விசாரிக்கும் அதிகாரிகள், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்கக் கட்டிகளை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தனர். இதையடுத்து, அதற்கான ஆவணங்களை ஊழியர்கள் அளித்துள்ளனர்; அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

