/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆடு வாங்க சென்றவரிடம் பணம் பறிமுதல்
/
ஆடு வாங்க சென்றவரிடம் பணம் பறிமுதல்
UPDATED : மார் 21, 2026 06:19 AM
ADDED : மார் 21, 2026 05:59 AM

அம்பத்துார்: அம்பத்துார் -- செங்குன்றம் சாலையில், கள்ளிக்குப்பம் அருகே தேர்தல் பறக்கும் படையினர், நேற்று அதிகாலை இரண்டு மணியளவில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வழியாக வந்த லோடு வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது, 3.08 லட்சம் ரூபாய் இருப்பது தெரிந்தது. விசாரணையில், புதுார், நியூ அண்ணாநகரைச் சேர்ந்த சாதிக் பாஷா, 58, என்பதும், கறிக்கடை நடத்தி வரும் இவர், ரம்ஜானை முன்னிட்டு, ஆடு வாங்குவதற்காக, 3.08 லட்சம் ரூபாய் கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளார். உரிய ஆவணங்கள் இல்லாததால், தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து, கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
தேர்தல் நடத்தை விதிமுறை ரொக்கப் பணப் பரிவர்த்தனை கட்டுப்பாடுகள் காரணமாக, தமிழகத்தின் பல சந்தைகளில் ஆடு விற்பனை மந்தமாக உள்ளது. அதே சமயம் ஆடுகளின் விலை கணிசமாக அதிகரித்தது.

