/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
510 கிலோ வெள்ளி மீட்பு மேலும் இருவர் சிக்கினர்
/
510 கிலோ வெள்ளி மீட்பு மேலும் இருவர் சிக்கினர்
ADDED : ஏப் 13, 2025 09:30 PM
மீஞ்சூர்:லண்டனில் இருந்து 39,000 கிலோ எடையிலான 1,305 வெள்ளிக்கட்டிகளை, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இறக்குமதி செய்தது.
இவை, சென்னை அடுத்த காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில், கடந்த வாரம் கன்டெய்னரில் வந்திறங்கியது. அந்த கன்டெய்னரில் இருந்து, 922 கிலோ எடையிலான 30 வெள்ளிக் கட்டிகள் மாயமாகின. இதன் மதிப்பு, 9 கோடி ரூபாய். இதுகுறித்து, காட்டூர் போலீசார் விசாரித்தனர்.
கடந்த 11ம் தேதி, மேற்கண்ட திருட்டு வழக்கில் தொடர்புடைய ஏழு பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த முகமது, 56, மணலியைச் சேர்ந்த சண்முகவேல், 32, ஆகியோரை, கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 5 கோடி ரூபாய் மதிப்பிலான 510 கிலோ எடையிலான 17 வெள்ளிக்கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவற்றை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

