sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

510 கிலோ வெள்ளி மீட்பு மேலும் இருவர் சிக்கினர்

/

510 கிலோ வெள்ளி மீட்பு மேலும் இருவர் சிக்கினர்

510 கிலோ வெள்ளி மீட்பு மேலும் இருவர் சிக்கினர்

510 கிலோ வெள்ளி மீட்பு மேலும் இருவர் சிக்கினர்


ADDED : ஏப் 13, 2025 09:30 PM

Google News

ADDED : ஏப் 13, 2025 09:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்:லண்டனில் இருந்து 39,000 கிலோ எடையிலான 1,305 வெள்ளிக்கட்டிகளை, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இறக்குமதி செய்தது.

இவை, சென்னை அடுத்த காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில், கடந்த வாரம் கன்டெய்னரில் வந்திறங்கியது. அந்த கன்டெய்னரில் இருந்து, 922 கிலோ எடையிலான 30 வெள்ளிக் கட்டிகள் மாயமாகின. இதன் மதிப்பு, 9 கோடி ரூபாய். இதுகுறித்து, காட்டூர் போலீசார் விசாரித்தனர்.

கடந்த 11ம் தேதி, மேற்கண்ட திருட்டு வழக்கில் தொடர்புடைய ஏழு பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த முகமது, 56, மணலியைச் சேர்ந்த சண்முகவேல், 32, ஆகியோரை, கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 5 கோடி ரூபாய் மதிப்பிலான 510 கிலோ எடையிலான 17 வெள்ளிக்கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவற்றை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us