ADDED : ஜூலை 31, 2025 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடியில் நடந்த பொதுமக்கள் குறைதீர் முகாமில் 69 மனுக்கள் விசாரணைக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், எஸ்.எம்.நகரில் உள்ள போலீஸ் கன்வென்சன் சென்டரில், கூடுதல் கமிஷனர் பவானீஸ்வரி தலைமையில், பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது.
வாரந்தோறும் புதன்கிழமை நடக்கும் இந்த முகாமில், கூடுதல் கமிஷனர் பவானீஸ்வரி, பொதுமக்களிடம் இருந்து 72 மனுக்கள் பெற்று, அதிகாரிகள் வாயிலாக தீர்வு காண உத்தரவிட்டார்.
இந்த முகாமில், போலீசார் மற்றும் 100க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.