sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கூவம் ஆற்றில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவர் பலி

/

 கூவம் ஆற்றில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவர் பலி

 கூவம் ஆற்றில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவர் பலி

 கூவம் ஆற்றில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவர் பலி


ADDED : டிச 08, 2025 05:05 AM

Google News

ADDED : டிச 08, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவேற்காடு: கூவம் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 14 வயது சிறுவன், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், 38. இவரது மனைவி வினோதினி, 35. இவர்களுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகன் அதர்வா, 14. இவர், திருவேற்காடு, சிவன் கோவில் தெருவில் உள்ள பாட்டி ஜெயபாரதி, 60, வீட்டில் தங்கி, ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், திருவேற்காடு, காமதேனு நகர் அருகே உள்ள கூவம் ஆற்றில், அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்களுடன் நேற்று மதியம் குளிக்கச் சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அதர்வா, நீச்சல் தெரியாமல் கூவம் ஆற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு போலீசார், பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன், அதர்வாவின் உடலை மீட்டு இறப்பிற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us