/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவன் புழல் ஏரியில் சடலமாக மீட்பு
/
மாணவன் புழல் ஏரியில் சடலமாக மீட்பு
ADDED : பிப் 04, 2024 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்குன்றம்: செங்குன்றம், நாரவாரிகுப்பம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி முரளி.
அவரது மகன் சுனில், 16 ; அரசு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம், வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பாததால், பெற்றோர் அவனை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், புழல் ஏரியில் சடலம் ஒன்று மிதப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
செங்குன்றம் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு கரையில் சேர்த்தனர்.
விசாரணையில், காணாமல் போன முரளியின் மகன் சுனில் என தெரிந்தது.
செங்குன்றம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.