/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையோர மழைநீரில் மிதந்த ஆண் சடலம்
/
சாலையோர மழைநீரில் மிதந்த ஆண் சடலம்
ADDED : டிச 04, 2024 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, டஆவடியை அடுத்த பட்டாபிராம், கோபாலபுரம், ஆறாவது பிரதான சாலையோரம் தேங்கியிருந்த தண்ணீரில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக, நேற்று முன்தினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பட்டாபிராம் போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தபோது, மதுபோதையில் தள்ளாடியபடி வந்த அந்த நபர், திடீரென சாலையோரத்தில் தேங்கிய மழை நீரில் விழுந்து கிடந்தது தெரிந்தது. இறந்தவர் யார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.