sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வக்கீல் கொலைக்கு பழிக்குப்பழி ஜாமினில் வந்தவர் வெட்டி கொலை

/

வக்கீல் கொலைக்கு பழிக்குப்பழி ஜாமினில் வந்தவர் வெட்டி கொலை

வக்கீல் கொலைக்கு பழிக்குப்பழி ஜாமினில் வந்தவர் வெட்டி கொலை

வக்கீல் கொலைக்கு பழிக்குப்பழி ஜாமினில் வந்தவர் வெட்டி கொலை


ADDED : அக் 14, 2025 01:14 AM

Google News

ADDED : அக் 14, 2025 01:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடையாறு, வழக்கறிஞர் கொலைக்கு பழிக்குப்பழியாக, ஜாமினில் வெளிவந்த நபரை மூன்று பேர் சேர்ந்து வெட்டி கொலை செய்தனர். குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கொட்டிவாக்கம், இளங்கோவன் நகரைச் சேர்ந்தவர் குணசேகரன், 45.

நேற்று மாலை, வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட இவர், அடையாறு, இந்திரா நகர் 1வது அவென்யூவில் காரை நிறுத்தி கீழே இறங்கினார். அப்போது, இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மூன்று பேர், அரிவாளால் குணசேகரனை சரமாரியாக வெட்டினர்.

இதில், ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அடையாறு போலீசார் உடலை பரிசோதனைக்காக, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர்.

முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரத்தில், கடந்தாண்டு ஜூன் மாதம், திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில் வைத்து வழக்கறிஞர் கவுதம் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில், முதல் குற்றவாளி குணசேகரன்.

சிறை சென்ற இவர், சமீபத்தில் ஜாமினில் வெளி வந்தார்.

வழக்கறிஞர் கொலைக்கு பழிக்குப்பழியாக, குணசேகரன் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கொலைக்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமோ என்ற கோணத்திலும், போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us