sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'ஓசி' செருப்பு தராத ஆத்திரம் கடைக்காரரை தாக்கிய வாலிபர் 

/

'ஓசி' செருப்பு தராத ஆத்திரம் கடைக்காரரை தாக்கிய வாலிபர் 

'ஓசி' செருப்பு தராத ஆத்திரம் கடைக்காரரை தாக்கிய வாலிபர் 

'ஓசி' செருப்பு தராத ஆத்திரம் கடைக்காரரை தாக்கிய வாலிபர் 


ADDED : ஏப் 16, 2025 12:10 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, அம்பத்துார், சோழம்பேடு சாலையைச் சேர்ந்தவர் அன்சாரி, 30. இவர், கடந்த 10 ஆண்டுகளாக, ஆவடி கோவர்த்தனகிரியில் 'டீலக்ஸ் புட் வேர்' என்ற பெயரில், காலணி விற்கும் கடை நடத்தி வருகிறார்.

கடந்த 11ம் தேதி மதியம், ஆவடி கோவர்த்தனகிரி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், 400 ரூபாய்க்கு செருப்பு வாங்கியுள்ளார். அன்சாரி, செருப்புக்கு பணம் கேட்டபோது, 'என் ஏரியாவில் கடை வைத்து கொண்டு, என்னிடமே பணம் கேட்கும் அளவுக்கு நீ பெரிய ஆளா' எனக் கேட்டு, தகாத வார்த்தைகளால் பேசி, தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பணம் தராததால், அன்சாரி, செருப்பை திரும்ப வாங்கி கொண்டார். அப்போது இருதரப்புக்கும் இடையே கைகலப்பானது. அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, ஓசியில் செருப்பு கேட்ட நபரின் மகன் பிரபு என்பவர், மதுபோதையில் கடைக்கு சென்று அன்சாரியை தாக்கி, கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி உள்ளார்.

சம்பவம் நடந்ததற்கான 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவு, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us