sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பால் சப்ளை நிறுத்தப்படும் பாலகங்களுக்கு ஆவின் எச்சரிக்கை

/

பால் சப்ளை நிறுத்தப்படும் பாலகங்களுக்கு ஆவின் எச்சரிக்கை

பால் சப்ளை நிறுத்தப்படும் பாலகங்களுக்கு ஆவின் எச்சரிக்கை

பால் சப்ளை நிறுத்தப்படும் பாலகங்களுக்கு ஆவின் எச்சரிக்கை


ADDED : ஆக 27, 2025 12:20 AM

Google News

ADDED : ஆக 27, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை 'நெய், பனீர் உள்ளிட்ட, பால் பொருட்களை, 'ஸ்டாக்' வைக்காத, ஆவின் பாலகங்களுக்கு, பால் சப்ளை நிறுத்தப்படும்' என, ஆவின் எச்சரித்துள்ளது.

இது குறித்து, ஆவின் அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில், 34 ஆவின் பாலகங்கள் மற்றும் 1,125 ஆவின் சில்லரை விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. மக்கள் கடைகளுக்கு வந்து, பால் உபபொருட்கள் கேட்கும் போது, இல்லை என்று யாரும் சொல்லக்கூடாது.

அதே போல், ஆவின் சில்லரை விற்பனை கடைகளில், அதிக பால் உப பொருட்கள் கொள்முதல் செய்து வியாபாரம் செய்தால், அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், மிக குறைவான பொருட்களே இருப்பு வைத்துள்ளனர்.

சில கடைகளில் எந்த பொருட்களும் இல்லை; பால் மட்டுமே வியாபாரம் செய்கின்றனர். இதே சூழ்நிலை தொடர்ந்தால், பால் சப்ளை நிறுத்தப்படும். தங்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்கை அடைய முடியாது.

எனவே, நெய், பட்டர், பனீர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்கள் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.








      Dinamalar
      Follow us