sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ரூ.25 லட்சம் மோசடி வழக்கு தலைமறைவானவர் சிக்கினார்

/

 ரூ.25 லட்சம் மோசடி வழக்கு தலைமறைவானவர் சிக்கினார்

 ரூ.25 லட்சம் மோசடி வழக்கு தலைமறைவானவர் சிக்கினார்

 ரூ.25 லட்சம் மோசடி வழக்கு தலைமறைவானவர் சிக்கினார்


ADDED : நவ 23, 2025 04:32 AM

Google News

ADDED : நவ 23, 2025 04:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, நவ. 23-

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி, மென்பொறியாளரிடம், 24.89 லட்சம் ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்ட வழக்கில், மேலும் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் சுதா கார்த்திக், 44; மென்பொறியாளர். கடந்த பிப்., 10ம் தேதி, சேத்துப்பட்டில் உள்ள கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில் அவர், 'ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என, ஆசை வார்த்தை கூறி, 24.89 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்களை கைது செய்து, இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த 17ம் தேதி மோசடியில் ஈடுபட்ட கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த தீபா, 26, என்பவரை கைது செய்தனர்.

தொடர்ந்து, தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று மோசடிக்கு உடந்தையாக செயல்பட்டு தலைமறைவாக இருந்த, கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த கிஷோர், 27, என்பவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us