sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அலட்சியத்தால் விபரீதம் சிறுவனுக்கு தீக்காயம்

/

அலட்சியத்தால் விபரீதம் சிறுவனுக்கு தீக்காயம்

அலட்சியத்தால் விபரீதம் சிறுவனுக்கு தீக்காயம்

அலட்சியத்தால் விபரீதம் சிறுவனுக்கு தீக்காயம்


ADDED : மார் 15, 2025 11:56 PM

Google News

ADDED : மார் 15, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, கணேசபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமிபதி, 45; தேங்காய் வியாபாரி. இவர், நேற்று முன்தினம் மாலை, தேங்காயை பறிக்க அரக்கோணம் அடுத்த ஜடேரி குப்பத்தில் வசிக்கும் வேலு, 12, என்ற சிறுவனை, திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து, டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தார்.

கணேசபுரம் கால்நடை மருத்துவமனை அருகே வந்தபோது, பெட்ரோல் தீர்ந்து வாகனம் நின்றது. இதையடுத்து, திருவாலங்காடு சென்று பெட்ரோல் வாங்கி வந்த லட்சுமிபதி, இருசக்கர வாகனத்தில் ஊற்ற முயன்றார். மாலை நேரம் போதிய வெளிச்சம் இல்லாததால், சிறுவனிடம் தீக்குச்சியை பற்றவைத்து, பெட்ரோல் டேங்க் அருகே காண்பிக்குமாறு கொடுத்துள்ளார்.

அப்போது, பெட்ரோல் சிதறி தீக்குச்சியில் விழுந்து தீப்பற்றியது. இதில், சிறுவனின் கையில் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிறுவன், திருவாலங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us