sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

செம்மஞ்சேரி - தாம்பரம் '99சி' தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கம்

/

செம்மஞ்சேரி - தாம்பரம் '99சி' தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கம்

செம்மஞ்சேரி - தாம்பரம் '99சி' தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கம்

செம்மஞ்சேரி - தாம்பரம் '99சி' தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கம்


ADDED : நவ 13, 2024 10:27 PM

Google News

ADDED : நவ 13, 2024 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பயணியரின் கோரிக்கையை ஏற்று, செம்மஞ்சேரி - தாம்பரம் மேற்கு இடையே, நேற்று முதல், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

தாம்பரம் புறநகரில் பயணியர் தேவை அதிகமாக உள்ள வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்குவது, புதிய வழித்தடங்களில் பேருந்து இயக்குவது குறித்து, மாநகர போக்குவரத்து திட்டமிடல் பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த வகையில், '99 சி' செம்மஞ்சேரி - தாம்பரம் மேற்கு வழித்தடத்தில், பயணியர் தேவை அதிகமாக இருப்பது தெரிந்தது.

இந்த வழித்தட பேருந்து பெரும்பாக்கம், நுக்கம்பாளையம், பொலினேனி கார்டன் வழியாக இயக்கப்படுகின்றன.

தற்போது, செம்மஞ்சேரியில் இருந்து 12 நடைகளும், தாம்பரத்தில் இருந்து 12 நடைகளும் என, 24 பயண நடைகள் இயக்கப்பட்டன.

எனவே, கூடுதலாக நான்கு பேருந்து சேவை அதிகரித்து, நேற்று முதல் 64 நடைகளாக அதிகரித்து, அப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us