/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முன்கூட்டியே கிடைக்கும் மகளிர் உரிமைத் தொகை; பொங்கலையொட்டி தமிழக அரசு அறிவிப்பு
/
முன்கூட்டியே கிடைக்கும் மகளிர் உரிமைத் தொகை; பொங்கலையொட்டி தமிழக அரசு அறிவிப்பு
முன்கூட்டியே கிடைக்கும் மகளிர் உரிமைத் தொகை; பொங்கலையொட்டி தமிழக அரசு அறிவிப்பு
முன்கூட்டியே கிடைக்கும் மகளிர் உரிமைத் தொகை; பொங்கலையொட்டி தமிழக அரசு அறிவிப்பு
ADDED : ஜன 09, 2025 12:11 PM

சென்னை: பொங்கல் திருநாளையொட்டி 1 கோடியே 14 லட்சத்து 61 ஆயிரம் மகளிருக்கும்  மகளிர் உரிமைத் தொகையை இன்றே வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள திட்டம் மகளிர் உரிமைத் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்திலுள்ள தகுதி வாய்ந்த 1 கோடியே 14 லட்சத்து 61 ஆயிரம் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் அவரவர் வங்கி கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது.
எதிர்வரும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில் மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாயினை முன்கூட்டியே வழங்கிட முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று உத்தரவிட்டுள்ளார்.  இந்த உத்தரவின் மூலம் பயன்பெறும் 1 கோடியே 14 லட்சத்து 61 ஆயிரம் பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கும் பணிகள் இன்று காலை முதலே தொடங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இன்று அவர்களின் வங்கி கணக்குகளில் ரூ.1,000 வரவுவைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

