sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தந்தைக்கு கத்திக்குத்து பாசக்கார மகன் கைது

/

தந்தைக்கு கத்திக்குத்து பாசக்கார மகன் கைது

தந்தைக்கு கத்திக்குத்து பாசக்கார மகன் கைது

தந்தைக்கு கத்திக்குத்து பாசக்கார மகன் கைது


ADDED : அக் 16, 2024 12:07 AM

Google News

ADDED : அக் 16, 2024 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, திருவல்லிக்கேணி, சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னதுரை, 47. கார் ஓட்டுநர். விஜயலட்சுமி, 47 என்பவரை, 23 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நிதிஷ் குமார், 23, நவீன்குமார், 20 என, இரண்டு மகன்கள் உள்ளனர்.

மூத்தமகன் நிதிஷ்குமார் ஒரு பெண்ணை காதலித்து வருவதை அறிந்த அவரது தந்தை, அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், மற்றவர்கள் ஆதரித்தனர். இதனால் தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவு 10:15 மணியளவில், வேலை முடிந்து வீட்டிற்கு சின்னதுரை சென்றுள்ளார். அப்போது அவரது மகன் நிதிஷ் குமார் ஆத்திரமடைந்து, காய்கறி வெட்டும் கத்தியால் தந்தையை ஆறு இடங்களில் குத்தியுள்ளார்.

இதில் பலத்தகாயமடைந்த அவர், அங்கிருந்து தப்பித்து ஓடினார். பின், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ஐஸ்ஹவுஸ் போலீசார், நேற்று நிதிஷ்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us