sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

படப்பையில் 9ல் ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க., அறிவிப்பு

/

படப்பையில் 9ல் ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க., அறிவிப்பு

படப்பையில் 9ல் ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க., அறிவிப்பு

படப்பையில் 9ல் ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க., அறிவிப்பு


ADDED : ஜன 04, 2025 12:35 AM

Google News

ADDED : ஜன 04, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, தமிழக அரசையும், குன்றத்துார் ஒன்றிய நிர்வாகத்தையும் கண்டித்து, படப்பையில், வரும் 9ம் தேதி, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

வண்டலுார் -வாலாஜாபாத் சாலை படப்பையில், மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால், வியாபாரிகள், மாணவர்கள் என, அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, படப்பை மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

குன்றத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட இடங்களில், குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை, ஊராட்சி நிர்வாகம் சீரமைக்கவில்லை. குடிநீர் வசதிகளும் முழுமையாக ஏற்படுத்தப்படவில்லை.

இதற்கு காரணமான தி.மு.க., அரசையும், குன்றத்துார் ஒன்றிய நிர்வாகத்தையும் கண்டித்து, வரும் 9ம் தேதி, காலை 10:00 மணிக்கு, படப்பையில் உள்ள குன்றத்துார் ஒன்றிய அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us