sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

28ல் ஸ்ரீபெரும்புதுாரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

/

28ல் ஸ்ரீபெரும்புதுாரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

28ல் ஸ்ரீபெரும்புதுாரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

28ல் ஸ்ரீபெரும்புதுாரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 24, 2025 12:17 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, 'தி.மு.க., அரசையும், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியையும் கண்டித்து, வரும் 28ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியில் உள்ள 15 வார்டுகளில், பாதாள சாக்கடை அமைக்க அ.தி.மு.க., ஆட்சியில், 102.11 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தன. ஆட்சி மாறியபின், இந்தப் பணிகள் முடிக்கப்படவில்லை.

அ.தி.மு.க., ஆட்சியில், 59.66 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட நீர்த்தேக்க தொட்டிகளை, இப்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

நகராட்சி பகுதிகளில் முறையாக மின்சாரம் வழங்கப்படுவதில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் அமைக்கப்பட்ட ராமானுஜர் மணி மண்டபம், இப்போது பாழடைந்துள்ளது.

இதற்கு காரணமான தி.மு.க., அரசையும், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து, வரும் 28ம் தேதி, காலை 10:00 மணிக்கு ஸ்ரீபெரும்புதுார் தாலுகா அலுவலகம் அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

முன்னாள் அமைச்சர்கள் வைகைச்செல்வன், சோமசுந்தரம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்பார்கள்.

இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.

***






      Dinamalar
      Follow us