sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருநின்றவூர் நகராட்சியை கண்டித்து வரும் 25ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

/

திருநின்றவூர் நகராட்சியை கண்டித்து வரும் 25ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

திருநின்றவூர் நகராட்சியை கண்டித்து வரும் 25ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

திருநின்றவூர் நகராட்சியை கண்டித்து வரும் 25ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 19, 2025 12:26 AM

Google News

ADDED : ஜூலை 19, 2025 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, 'திருநின்றவூர் நகராட்சியை கண்டித்து, வரும் 25ம் தேதி, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில், குப்பை சரியாக அள்ளப்படுவதில்லை. கொசு மருந்து அடிப்பதில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. தடையின்றி குடிநீர் வழங்கப்படவில்லை. நகராட்சி நிர்வாகத்தை அணுகினால் உரிய பதில் இல்லை.

இதற்கு காரணமான திருநின்றவூர் நகராட்சியையும், தி.மு.க., அரசையும் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், வரும் 25ம் தேதி மாலை 4:00 மணிக்கு, திருநின்றவூர் காந்தி சிலை எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் வைகைச்செல்வன், அப்துல் ரஹீம், அமைப்புச் செயலர் திருவேற்காடு சீனிவாசன், திருவள்ளூர் தெற்கு மாவட்டச் செயலர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் பங்கேற்பர்.

இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us